Wednesday, April 6, 2011

தபூக் போர் - கஅப்(ரலி)

கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப் (ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கிவிட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

கஅப்(ரலி)அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்த யுத்தத்தை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று யுத்தத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் - குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உறுதிமொழி கொடுத்த போது நடைபெற்ற நள்ளிரவு கணவாய் உடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் ஆஜராகியுள்ளேன். அதற்குப் பகரமாக பதருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெறுவதை நான் விரும்பவில்லை. அதையவிட பத்ருப் போர்தான் மக்களிடையே அதிகம் பேசப்படக்கூடியதாக இருந்தாலும் சரியே!

كَا نَ مِنْ خَبَرِيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْ رَّسُوْلِ اللهِ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَلَمْ يَكُنْ رَسُوْلُ اللهِ يُرِيْدُ غَزْوَةً اِلاَّ وَرَّي بِغَيْرِهَا حَتَّي تِلْكَ الْغَزْوَةِ, فَغَزَاهَا رَسٌوْلُ اللهِ فِيْ حَرٍّ شّدِيْدٍ, وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيْدًاوَ مَفَازًا, وِاسْتَقْبَلَ عَدَدًا كَثِيْرًا , فَجَلَّي للمُسْلِمِيْنَ أمْرَهُمْ لِيَتَأهَّبُوْا اُهْبَةَ غَزْوِهِمْ فَأخْرَهُمْ بِوَجْهِهِمُ الَّذِيْ يُرِيْدُ, وَ الْمُسْلِمُوْنَ مَعَ رَسُوْلِ اللهِ كَثِيْرٌ وَ لاَ يَجْمَعُهُمْ كِتَابٌ حَافِظٌ (يُرِيْدُ بِذَلِكَ الدِّوَانَ) قَالَ كَعْبٌ : فَقَلَّ رَجُلٌ يُرِيْدُ أنْ يَتَغَيَّبَ اِلاَّ ظَنَّ أنَّ ذَلِكَ سَيَخْفَي بِهِ مَا لَمْ يَنْزِلْ وَحْيٌ مِنَ اللهِ, وَغَزَا رَسُوْلُ اللهِ تِلْكَ الْغَزْوَةَ حِيْنَ طَابَتْ الثِّمَارُ وَ الظِّلاَلُ فَأنَااِلَيْهَا أصْعَرُ

நான் அதிக அளவு சக்தியும் சௌகரியுமும் முன்னெப்போதும் பெற்றிருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்கு முன்பு ஒருபொழுதும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் இருந்ததில்லை! ஆனால் அந்தப் போரின்போது இரண்டு ஒட்டகங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனைச் சாடைமாடையாக- மறைத்தே பேசுவார்கள். இவ்வாறு இந்தப் போரும் வந்தது! நபியவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்டது கடுமையான வெயில்நேரத்தில்! அதுவும் நெடியதொரு பயணத்தை மேற்கொண்டார்கள். பாலைவெளியைக் கடந்து செல்ல நேர்ந்தது! எதிரிகளின் அதிக எணண்ணிக்கை கொண்ட படையைச் சந்திக்கநேர்ந்தது! எனவே முஸ்லிம்கள் தங்களுடைய போர்தடவாடங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக யதார்த்த நிலையை அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். முஸ்லிம்கள் எங்கு நோக்கிச் செல்லவேண்டுமென்பது தமது நாட்டம் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக அளவில் புறப்பட்டிருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை எந்த ஏட்டிலும் பதிவு செய்துவைக்கப்படவில்லை. (அதாவது அரசாங்கப் பதிவேடு என்று எதுவும் அப்பொழுது இல்லை)

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: போருக்குப் புறப்படாமல் தங்கிவிடலாமென  விரும்பும் எவரேனும் இருந்தால் நாம் கலந்து கொள்ளாதது பற்றி அல்லாஹ்விடம் இருந்து வஹி (குர்ஆன் வசனம்) இறங்கினாலே தவிர அது யாருக்கும் தெரியப் போவதில்லை - என்றே எண்ணிக் கொண்டிருந்தார்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்ட நேரத்தில் கனிகள் கனிந்திருந்தன., நிழல்கள் நன்கு அடர்த்தியாகி விட்டிருந்தன! நான் அவற்றின் மேல் அதிக மையல் கொண்டிருந்தேன்!

فَتَجَهَّزَ رَسُوْلُ اللهِ وَالْمُسْلِمُوْنَ مَعَهُ , وَطَفِقْتُ أغْدُولِكَيْ أتَجَهَّزَ مَعَهُ , فَأرْجِعُ وَلَمْ أقْضِ شَيْئًَ, وَأقُوْلُ فِيْ نَفْسِي, : أنَا قَادِرٌ عَلَي ذَلِكَ اذَا ارَدْتُ, فَلَمْ يَزَلْ يَتَمَادَي بِي حَتَّي اسْتَمَرَّ بالنَّاسِ الْجِدُّ , فَاصْبَحَ رَسُوْلُ اللهِ غاَدِيًا وَالْمُسْلِمُوْنَ مَعَهُ , وَلَمْ أقْضِ مِنْ جِهَازِي شَيْئًا , ثُمَّ غَدَوْتُ فَرَجَعْتُ وَلَمْ أقْضِ شَيْئًا فَلَمْ يَزَِلْ يَتَمَادَي بِيْ حَتَّي أسْرَعُوْا وَ تَفَارَطَ الْغَزْوُ فَهَمَمْتُ أَنْ أرْتَحِلَ فَأدْرَكَهُمْ , فَيَا لَيْتَنِي فَعَلْتُ, ثُمَّ لَمْ يُقَدَّرْ ذَلِكَ لِيْ فَطَفِقْتُ اِذَا خَرَجْتُ فِيْ النَّاسِ بَعْدَ خُرُوْجِ رَسُوْلِ اللهِ يَحْزُنُنِيْ أَنِّيْ لاَ أَرَي لِيْ اُسْوَةً, اِلاَّ رَجُلاً مَغْمُوصًا عَلَيْهِ فِي النِّفَاقِ اَوْ رَجُلاً مِمّنْ عَذَرَ اللهُ تَعَالَي مِنَ الضُّعَفَاءٍ

 நபி(ஸல்) அவர்கள் போருக்கான ஏற்பாட்டைச் செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும் அதற்கான ஏற்பாட்டை முழுமையாக்கி விட்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகக் காலையில் புறப்படலானேன். ஆனால் எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பிவருவேன்.

நான் என் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்: நாம் நாடிவிட்டால் எற்பாட்டைச் செய்துமுடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது!- இந்த எண்ணம் தான் தொடர்ந்து என்னைத் தாமிதப்படுத்திக் கொண்டே இருந்தது! மக்களோ இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்!

நபி(ஸல்)அவர்கள் தோழர்களுடன் ஒரு நாள் அதிகாலையில் போருக்காகப் புறப்பட்டுவிட்டார்கள். நானோ அதுவரையில் எவ்வித ஏற்பாட்டையும் செய்து முடிக்காமலேயே இருந்தேன். பிறகு மறுநாள் காலையில் சென்றேன். எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வந்தேன். இவ்வாறு நான் தாமிதமாகிக் கொண்டே இருந்தேன். படைவீரர்களோ மிகவேகமாகப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். வெகுதூரம் சென்றுவிட்டார்கள். நானும் பயணம் புறப்பட முனையத்தான் செய்தேன்., எப்படியேனும் அவர்ளைப் பிடித்துவிட வேண்டும் என நாடத்தான் செய்தேன். அந்தோ! அப்படி நான் செய்தேனில்லையே! எனது விதியில் அந்தப் பாக்கியம் எழுதி வைக்கப் பட்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

நபி(ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது - நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை., இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது! 

وَلَمْ يَذْكُرْنِي رَسُوْلُ اللهِ ' حَتَّي بَلَغَ تَبُوْكًا , فَقَالَ وَهُوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوْكٍ : مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ؟ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِيْ سَلِمَةَ: يَا رَسٌوْلَ اللهِ حًَبَسَهُ بُرْدَاهُ, وَالنَظَرُ فِيْ عِطْفِيْهِ فَقَالَ لَهُ مُعَادُ بْنُ جَبَلٍ : بِئْسَ مَا تَقُوْلُ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا عَلِمْناَ عَلَيْهِ الاَّ خَيْرًا, فَسَكَتَ رَسُوْ لُ الله ِ فَبَيْنَمَا هُوْ عَلَي ذَلِكَ رَأي رَجُلاً مُبَيَّضًا يَزُوْلُ بِهِ السَّرَابُ . فَقَالَ رَسُوْلُ اللهِ : كُنْ أبَا خَيْثَمةَ, فَأذَا هُوَ أبُو خَيْثَمَةَ  الاَنْصَارِي وَهُ الذِّيْ تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِيْنَ لَمَزَهُ الْمُنَافِقُوْنَ

 நபி (ஸல்) அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில் மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்தபொழுது கேட்டார்கள்: கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருந்கும் வேஷ்டியும் மேலங்கியும் அவரைத் தடுத்துவிட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!

அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டாய்! அல்லாஹ்வின்தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை! - நபி (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.

இதற்கிடையில் வெள்ளை ஆடை அணிந்த ஒருமனிதர் பாலைவனத்தில் கானல் அசைவதுபோல் வந்துகொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். இவர் அபூ கைஸமா- ஆகத்தான் இருக்கவேண்டும் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அபூ கைஸமாதான் வந்து கொண்டிருந்தார்! இவர் ஒரு அன்ஸாரித் தோழர்., இவர்தான் ஒருமரைக்கால் பேரீத்தம் பழத்தை ப்போர்) நிதியாக வழங்கினார். அப்பொழுது அவரை நயவஞ்சகர்கள் குறை பேசினார்கள்.

21 தபூக் யுத்தமும் தடுமாற்றமும் - 2

சிந்தையில் இருந்து பொய் அகன்றுவிட்டது!

رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ للِنَّاسِ , فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُوْنَ يَعْتَذِرُوْنَ اِلَيْهِ وَ يَحْلِفُوْنَ لَهُ, وَ كَانُوْا بِضْعًا وَ ثَمَانِيْنَ رَجُلاً فَقُبِلَ مِنْهُمْ عَلاَنِيُتُهُمْ وَ بَايَعَهُمْ وَ اسْتَغْفَرَلَهُمْ وَ وَكَّلَ سَرَائَهُمْ اِلَي اللهِ تَعَالَي
கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தபூக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் செய்தி எனக்குக் கிடைத்தபொழுது கவலை என்னை ஆட்கொண்டது! எப்படிப் பொய் சொல்லலாமெனச் சிந்திக்க ஆரம்பித்தேன். நாளை நபியவர்களின் கோபத்தை விட்டும் எப்படித் தப்பிக்கப் போகிறோமோ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது தொடர்பாக எனது குடும்பத்தில் விஷயஞானம் உடைய அனைவரிடமும் ஆலோசனை கலந்தேன்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதோ வந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட பொழுது (எனது சிந்தையிலிருந்து) பொய் அகன்றுவிட்டது. பொய் சொல்லி எந்த வகையிலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கு உறுதியாகிவிட்டது. எனவே அவர்களிடம் உண்மையே கூறுவது என்று உறுதியான முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் அதிகாலையில் வருகை தந்தார்கள். அவர்கள் எப்போது பயணத்திலிருந்து திரும்பி வந்தாலும் முதலில் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். அப்படியே அமர்ந்து மக்களிடம் உரையாடுவார்கள்.

அப்படி அமர்ந்திருந்தபொழுது - போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் வந்து நபியவர்களிடம் சாக்குப் போக்குச் சொன்னார்கள்., அவர்களிடம் சத்தியம் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதுக்கும் மேல்இருந்தது. அந்த மனிதர்கள் வெளிப்படையாய் எடுத்துவைத்த வாதங்களை நபியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள். அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். அவர்களின் உள்ளத்து ரகசியங்களை உயர்வுமிக்கவனாகிய அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள்! 

حَتَّي جِئْت , فَلَمَّا سَلَّمْتُ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ ثُمَّ قَالَ: تَعَالَ, فَجِئْتُ أمْشِي حَتَّي جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ, قَال لِي: مَا خَلَّفَكِ ؟ ألَمْ تَكُنْ قَدْ أبْتَعْتَ ظَهْرَكَ! قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ اِنِّي وَ اللهِ لَوْ جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أهْلِ الدُّنْيَا لَرَأيْتُ أنِّي سَأخْرُجُ مِنْ سَخْطِهِ بِعُذْرٍ, لَقَدْ اُعْطِيْتُ جدَلاً, وَلَكِنِي وَاللهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيْثَ كِذْبٍ تَرْضَي بِهِ عَنِّي بِهِ لَيُوْشِكَنَّ اللهُ يُسْخِطُكَ عَلَيَّ, وَ اِنْ حَدَّثْتُكَ حَدِيْثَ صِدْقٍ تَجِدُ عَلَيَّ فِيْهِ اِنِّي لأرْجُوْ فِيْهِ عُقْبَي اللهِ عَزَّ وَ جَلَّ , وَاللهِ مَا كَانَ لِيْ مِنْ عُذْرٍ , وَاللهِ مَا كُنْتُ قَطُّ أقْوَي وَ لاَ أيْسَرَ مِنِّي حَيْنَ تَخَلَّفْتُ عَنْكَ قَالَ : فَقَالَ رَسُوْلُ اللهِ  : أمَّا هَذَا فَقَدْ صَدَقَ , فَقُمْ حَتَّي يَقْضِيَ اللهُ فِيْكَ

கடைசியாக நான் சென்றேன். நான் ஸலாம் கூறியபொழுது நபி (ஸல்) அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தியவாறு புன்னகை செய்தார்கள். பிறகு சொன்னார்கள்: 'அருகே வாரும்' - நான் சென்று நபியவர்களின் முன்னால் அமர்ந்தேன் என்னிடம் கேட்டார்கள்: நீர் ஏன் புறப்படாமல் இருந்துவிட்டீர்? நீர் ஒட்டகத்தை வாங்கி வைத்திருக்கவில்லையா?,,

நான் சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக!தாங்களின் சமூகத்திலன்றி உலகில் வேறொருவர் முன்னால் நான் அமர்ந்திருந்தால் ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி அவரது கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமென நான் கருதியிருப்பேன். அந்த அளவுக்கு வாதம் புரியும் திறனை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான்.

ஆனாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உறுதியாக அறிந்துள்ளேன்: அதாவது இன்று நான் தாங்களிடம் பொய் சொல்லி அதனடிப் படையில் தாங்கள் என்னைப் பொருந்திக் கொண்டாலும் - அல்லாஹ் என் மீது உங்களைக் கோபம் கொள்ளச் செய்தே தீருவான்! நான் உங்களிடம் உண்மை உரைத்து, அதனால் நீங்கள் என் மீது கோபம்கொண்டால் - நிச்சயமாக நான் அது விஷயத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் தக்க காரணம் எதுவுமில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உங்களுடன் (போருக்குப்)புறப்படாமல் தங்கிவிட்ட பொழுது நல்ல ஆற்றல் உடையவனாக - வசதியுடையவனாகவே இருந்தேன்., முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு!
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இவர்தான் உண்மை சொல்லியுள்ளார். நீர் செல்லலாம்., அல்லாஹ் உம் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நேரத்தை நீர் எதிர்பார்த்திரும்,,

وَسًارَ رِجَالٌ مِنْ بَنِي سَلِمَةَ فَاتَّبَعُوْنِي , فَقَالُوْالِي: وَاللهِ مَا عَلِمْنَاكَ أذْنَبْتَ ذَنْبًا قَبْلَ هَذَا, لَقَدْ عَجَزْتَ فِي أنْ لاَ تَكُوْنَ اعْتَذَرْتَ اِلَي رَسُوْلِ اللهِ  بِمَا اعْتَذَرَ الْمُخَلَّفُوْنَ فَقَدْ كَانَ كَافِيْكَ ذَنْبَكَ اسْتِغْفَارُ رَسُوْلِ اللهِ  لَكَ, قَالَ: فَوَاللهِ مَا زَالُوْا يُؤَنِّبُوْنَنِي حَتَّي أرَدْتُّ أنْ ارْجِعَ اِلَي رَسُوْلِ اللهِ  فَاُكَذِّبَ نَفْسِيْ, ثُمَّ قُلْتُ لَهُمْ: هَلْ لَقِيَ هَذَا مَعِيَ مِنْ أحَدٍ ؟ قَالُوْأ: نَعَمْ لَقِيَهُ مَعَكَ رَجُلاَنِ قَالاَ مِثْلَ مَا قُلْتَ, وَقِيْلَ لَهُمَا مِثْلَ مَا قِيْلَ لَكَ, قَالَ قُلْتُ : مَنْ هُمَا؟ قَالُوْأ: مُرَارَةُ بْنُ الرَّبِيْعِ الْعَمْرِيُّ , وَ هِلاَلُ بْنُ أمَيَّةَ الْوَاقِفِيُّ, قَالَ: فَذَكَرُوْا لِيْ رَجُلَيْنِ قَدْ شَهِدَا بَدْرًا فِيْهِمَا أسْوَةٌ. قَالَ : فَمَضَيْتُ حِيْنَ ذَكَرُوْهُمَا لِيْ.

ஸலாம் சொல்வேன்.,
அருகிலேயே தொழுவேன்,,

பனூ ஸலிமா கிளையைச் சேர்ந்த சிலர் என்னைத் தொடர்ந்து நடந்து வந்தார்கள். என்னிடம் சொன்னாகள்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன்பு நீர் எந்தப் பாவமும் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. போருக்குப் புறப்படாதிருந்த ஏனையோர் சாக்குப்போக்கு சொன்னது போல் நீரும் சாக்குப்போக்குச் சொல்வதற்கில்லாமல் செய்துவிட்டீரே! நபியவர்கள் உமக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தனை செய்வதே உமது பாவத்திற்குப் பரிகாரமாக - போதுமானதாக ஆகியிருக்குமே!,,

கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவ்வாறு அவர்கள் என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தனர். எந்த அளவுக்கெனில், நபியவர்களிடம் திரும்பிச் சென்று முன்பு நான் சொன்னது உண்மையல்ல என்று சொல்லிவிடலாமா? என்றுகூட நான் சிந்தித்தேன்,,
- பிறகு அந்த மனிதர்களிடம் கேட்டேன்: என்னைப் போல் இந்நிலைக்கு ஆளானோர் எவரேனும் உண்டா?,,

அவர்கள் சொன்னார்கள்: இரண்டு போர் உம்மைப்போல் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். நீர்சொன்னது போன்றே அவர்களும் சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டது போன்றே அவர்களிடமும் சொல்லப்பட்டுள்ளது,,
'அவர்கள் யார் யார்?'

'முறாறா பின் ரபீஇல் ஆமிரி, ஹிலால்பின் உமையா -அல் வாகிஃபி'

கஅப் (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்: 'அவர்கள் என்னிடம் சொன்ன இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள் எனில், இருவரும் பத்றுப் போரில் கலந்து கொண்டவர்கள்., அவ்விருவரிலும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது!'

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: அவ்விருவரைப் பற்றியும் மக்கள் என்னிடம் சொன்போது நான் பேசாமல் சென்றுவிட்டேன்,,

وَنَهَي رَسُوْلُ الله ِ عَنْ كَلاَمِنَا أيُّهَا الثَّلاَثَةُ مِنْ بَيْنِ مَنْ تَخَلَّفَ عَنْهُ. قَالَ: فَاجْتَنَبَنَا النَّاسُ - أوْ قَالَ : تَغَيَّرُوْا لَنَا - حَتَّي تَنَكّرَتْ لِي فِيْ نَفْسِي الأرْضُ, فَمَا هِيَ بِالأرْضِ التِّي أعْرِفُ, فَلَبِثْنَا عَلَي ذَلِكَ خَمْسِيْنَ لَيْلَةً. فَأمَّا صَاحِبَايَ فَاسْتَكَانَا وَقَعَدَا فِيْ بُيُوْتِهِمَا يَبْكِيَانِ, وَأمَّا أنَا فَكُنْتُ أشَبَّ الْقْمِ وَ أجْلَدَهُمْ , فَكُنْتُ أخْرُجُ فَأشْهَدُ الصَّلاَةَ مَعَ الْمُسْلِمِيْنَ, وَأطُوْفُ فِيْ الأسْوَاقِ وَلاَ يُكَلِّمُنِي أحَدٌ, وَآتِيْ رَسُوْلَ اللهِ  فَاُسَلِّمُ عَلَيْهِ, وَهُوَ فِيْ مَجْلِسِهِ بَعْدَ الصَّلاَةِ فَاقُوْلُ فِي نَفْسِي : هَلْ حَرَّكَ شَفَتَيْهِ بِرَدِّ السَّلاَمِ أمْ لاَ؟

 யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பின் தங்கியவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள். (அல்லது இந்த இடத்தில் கஅப்அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்:) எங்கள் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை மாறிவிட்டது,

எனது மனத்தில் விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்து அந்திய பூமியாகத் தென்பட்டது! நான் முன்பு அறிந்த பூமியாக அது இல்லை! ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள் இருந்தோம்,,

என்னுடைய இருதோழர்களோ அடங்கிவிட்டார்கள். அழுத வண்ணம் வீ;ட்டிலேயே முடங்கிக்கிக் கிடந்தார்கள். மூன்று பேரில் நான் தான் வயதில் குறைந்தவனாகவும் வலிமை மிக்கவனாகவும் இருந்தேன்.

நான் வெளியே செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்துகொள்வேன். கடை வீதிகளிலே சுற்றுவேன். யாருமே என்னுடன் பேசமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்களிடம் ஆஜராவேன்., அவர்களுக்கு ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். 

21 தபூக் யுத்தமும் தடுமாற்றமும் - 3  
உண்மைக்குக் கிடைத்த பரிசு

நான் வெளியே செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்துகொள்வேன். கடை வீதிகளிலே சுற்றுவேன். யாருமே என்னுடன் பேச மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவர்களிடம் ஆஜராவேன்., அவர்களுக்கு ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

பிறகுஅவர்களுக்கு அருகிலேயே தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது நபியவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கம் முன்னோக்கும் பொழுது என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

இவ்வாறாக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு நீடிப்பதை நான் உணர்ந்தபோது - ஒருநாள் அப்படியே நடந்துசென்றேன். அபூ கதாதாவின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன். அவர் என் சிறிய தந்தையின் மகன்! எனக்கு மிகவும் பரியமானவர். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் கேட்டேன்: அபூ கதாதாவே! அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கிறேன்: நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியாதா? - அவர் மௌனமாக இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து அவரிடம் அவ்வாறு கேட்டேன். அப்பொழுதும அவர் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது தடவையும் கேட்டேன். அப்பொழுது சொன்னார். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் மிகவும் அறிந்தவர்கள்,,

என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. வந்த வழியே திரும்பி சுவர் ஏறித்தாவி வெளியே வந்தேன்.

அப்படியே மதீனாவின் கடைவீதியில் நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, உணவுப் பொருள்களை மதீனாவில் விற்பனை செய்ய வந்திருந்த சிரியா தேசத்து விவசாயி ஒருவன் அங்கே, கஅப் பின் மாலிக்கை அறிவித்துக் கொடுப்பவர் யார்? என்று கேட்;டுக்கொண்டிருந்தான். உடனே மக்கள் என் பக்கம் சுட்டிக் காட்டி அவனுக்கு என்னைத் தெரியப்படுத்தத் தொடங்கினார்கள். உடனே அவன் என்னிடம் வந்தான். கஸ்ஸான் மன்னன் எழுதிய ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தான். நான் எழுத்தறிவுடையவனாக (அதாவது எழுதவும் படிக்கவும் தெரிந்தவனாக) இருந்தேன். அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதில் எழுதப்பட்டிருந்தது:

أمَّا بَعْدُ فَاِنَّهُ قَدْ بَلَغَنَا أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ, وَلَمْ يَجْعَلْكَ اللهُ بِدَارِ هَوَانٍ وَلاَ مَضِيْعَةٍ, فَالْحَقْ بِنَا نُوَاسِكَ, فَقُلْتُ حَيْنَ قَرَأتُهَا : وَهَذِهِ أيْضًا مِنَ الْبَلاَءِ فَتَيَمَّمْتُ بِهَا التَّنُّوْرَ فَسَجَرْتُهَا

நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் எனும் செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது. கேவலமும் உரிமையிழப்பும் உடைய நாட்டில் அல்லாஹ் உம்மை வைத்திருக்கவேண்டாம். எங்களிடம் வந்துவிடும். நாங்கள் உம்மை உபசரிப்போம்,.

அதைப் படித்தபொழுது - இதுவும் ஒருசோதனையே!,,என்று சொன்னேன், பிறகு அந்தக் கடிதத்தை அடுப்பில் தூக்கி வீசி எரித்துவிட்டேன்.

- இவ்வாறு ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்துவிட்டபொழுது - வஹி எனும் இறையருட்செய்தி இறங்காபொழுது நபியவர்களின் தூதுவர் என்னிடம் வந்து சொன்னார்: நீர் உம் மனைவியைவிட்டும் பிரிந்திருக்குமாறு நபியவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்,.

அவளை நான் விவாவரத்து செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும் ? என்று நான் கேட்டேன்,

'இல்லை., அவளைவிட்டும் விலகியிரும்! அவளை நெருங்கக் கூடாது'' என்றார் அவர்.  இதேபோன்ற கட்டளையை என்னிரு தோழர்களுக்கும் நபி (ஸல்) அனுப்பியிருந்தார்கள். நான் என் மனைவியிடம் சென்னேன்: நீ உன் பெற்றோரிடம் சென்றுவிடு! அல்லாஹ் இந்த விஷயத்தில் ஒரு தீர்ப்பை அளிக்கும் வரையில் அவர்களிடம் தங்கியிரு,,

ஹிலால் பின் உமையாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொன்னாள்: ஹிலால் பின் உமையா தள்ளாத வயதுடைய முதியவராக இருக்கிறார். அவருக்குப் பணிவிடை செய்பவர் யாரும் இல்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதைத் தாங்கள் விரும்பவில்லையா? என்ன?,,
அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியில்லை., ஆனால் அவர் உன்னை நெருங்கக்கூடாது,,

அதற்கு அந்தப்பெண்மணி கூறினாள்: 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எந்தச் செயலின் பக்கமும் எந்த அசைவும் அவரிடம் இல்லை. அவரது விவகாரம் இவ்வாறு ஆனதிலிருந்து இன்றுவரை அவர் ஓயாது அழுது கொண்டே இருக்கிறார்'

என்னுடைய குடும்பத்தினர் சிலர் என்னிடம் சொன்னார்கள்: உமது மனைவி விஷயத்தில் நபியவர்களிடம் நீர் அனுமதி கேட்கக்கூடாதா?,,

நான் சொன்னேன்: அவள் விஷயத்தில் நபியவர்களிடம் நான் அனுமதி கேட்டால் நபியவர்கள் சொல்லப் பேவதென்ன என்பது எனக்கு என்ன தெரியும்? நானோ இளைஞனாக இருக்கிறேன்,,

இதேநிலையில் பத்து நாட்கள் கழிந்து சென்றன. எங்களோடு எவரும் பேசக்கூடாது என்று தடைவிதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தன!

உண்மைக்குக் கிடைத்த பரிசு

பிறகு ஐம்பதாவது நாள் அதிகாலையில் எங்களது வீடொன்றின் மாடியில் நான் ஃபஜ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்தேன். நான் அந்த நிலையிலே - அதாவது, எங்களைப் பற்றி (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ளது போல் - உயிர் வாழ்வதே எனக்குக் கஷ்டமாகிவிட்டது. பூமி இவ்வளவு விரிவாக இருந்தும் என்னைப் பொறுத்து குறுகிப் போய்விட்டது,, என்ற அந்நிலையிலே இருந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஸல்வு என்ற மலை மீதேறி சப்தமிட்டு அழைப்பவரின் அழைப்பைக் கேட்டேன்! ' ஓ!....! கஅப் பின் மாலிக்! நற்செய்தி பெறுவீராக! '

-அப்படியே ஸஜ்தாவில் விழுந்தேன். நமது துன்பம் நீங்கியது என்பதை அறிந்தேன்!

நபி(ஸல்)அவர்கள் ஸுப்ஹு தொழுதபொழுது, எங்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்துவிட்டான் என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

فَذَهَبَ النَّاسُ يُبَشِّرُوْنَنَا , فَذَهَبَ قِبَلَ صَاحِبَيَّ مُبَشِّرُوْنَ, وَرَكَضَ رَجُلٌ اِلَيَّ فَرَسًا وَسَعَي سَاعٍ مِنْ أسْلَمَ قِبَلِيْ وَ أوْفَي عَلَي الْجَبَلِ, وَكَانَ الصَّوْتُ أسْرَعَ مِنَ الْفَرَسِ, فَلَمَّا جَاءَنِِيَ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا اِيَّاهُ بِبَشَارَتِهِ, وَاللهِ مَا أمْلِكُ غَيْرَهُمَا يَوْمَئِذٍ , وِاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبِسْتُهُمَا وَانْطَلَقْتُ أتَأمَّمُ رَسُوْلَ اللهِ  يَتَلَقَّانِيَ النَّاسُ فَوْجً فَوْجًا يُهَنِّئُوْنَنِي بِالتَوْبَةِ وَ يَقُوْلُوْنَ لِيْ: لِتَهْنِكَ تَوْبَةُ اللهِ عَلَيْكَ,

உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்திடப் புறப்பட்டு விட்டார்கள். என் இரு தோழர்களை நோக்கியும் நற்செய்தியாளர்கள் சென்றனர். ஒருவர் குதிரை மீது ஏறி என்னை நோக்கி விரைந்து வந்தார். அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒருவரோ என்னை நோக்கி விரைந்து வந்தவர் மலை உச்சியிலே ஏறிவிட்டார். அவரது குரலின் வேகம் குதிரையை விடவும் விரைவானதாக இருந்தது.

எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ அவர் என்னிடம் வந்த போது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவற்றை அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்பொழுது அவற்றைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை. பிறகு இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் ஆஜராக நாடியவாறு புற்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தனர். பாவமன்னிப்புக் கிடைத்ததன் பேரில் என்னை வாழ்த்திக் கொண்டிருந்தனர்! மக்கள் என்னிடம் சொன்னார்கள்: உமது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டதன் பேரில் உமக்கு வாழ்த்துக்கள்!,,

அவ்வாறாக மஸ்ஜிதுக்குள் நுழைந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தார். எனக்குக் கைலாகு கொடுத்தார். எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்கள் வேறெவரும் எழுந்து வரவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் (ரலி) அவர்கள் என்றென்றும் மறக்காமல் இருந்தார்கள்!
கஅப் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:நான் நபி(ஸல்)அவர்களுக்கு ஸலாம் சொன்னபொழுது - நபியவர்கள் கூறினார்கள்., அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக்கொண்டிருந்தது: உம் அன்னை உம்மை ஈன்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைக்கப்பெறாத சிறந்ததொரு நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!,, 

நான் கேட்டேன்: இது தாங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத் திலிருந்து வந்ததா?,,

நபியவர்கள்: இல்லை., இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும்,,

- நபி (ஸல்)அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஏதோ! அது சந்திரனின் ஒருபகுதியைப் போலிருக்கும். நபியவர்களின் இந்நிலையை நாங்கள் அறிபவர்களாய் இருந்தோம்.

நான் நபி(ஸல்) அவர்களின் முன்னால் உட்கார்ந்தபொழுது சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மன்னிப்புக் கிடைத்ததன் பொருட்டு நன்றி செலுத்திடவே எனது எல்லாச் சொத்துக்களையும் அல்லாஹ் - ரஸூலின் பாதையில் தர்மம் செய்கிறேன்,,

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: 'உமது சொத்தில் சிறிது அளவை உமக்காக வைத்துக் கொள்ளும். இதுவே உமக்குச் சிறந்ததாகும்'
நான் சொன்னேன்: கைபரில் இருந்து எனக்குக் கிடைத்த பங்கை எனக்காக நான் வைத்துக்கொள்கிறேன்,,

மேலும் நான்சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசியதனால் தான் அல்லாஹ் எனக்கு ஈடேற்றம் அளித்துள்ளான். எதிர்காலத்தில் என் ஆயுள் முழுவதும் உண்மையே நான் பேசுவேன் என்பதும் - எனக்கு மன்னிப்பு கிடைத்ததன் பொருட்டு நான் செலுத்தும் நனிறியாக உள்ளது,,

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில், உண்மையே பேசுவேன் என நான் வாக்குறுதி கொடுத்த நாளில் இருந்து இன்று வரை முஸ்லிம்களில் எவரைக் குறித்தும் (நான் அறியேன் அதாவது) உண்மை பேசும் விஷயத்தில் அல்லாஹ் என்னைச் சோதனைக் குள்ளாக்கியதை விடவும் அழகாக அல்லாஹ் அவரைச் சோதனைக்குள்ளாகியதை நான் அறியேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில் இருந்து இன்றைய தினம் வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய்பேச நான் நாடியதே இல்லை. எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு,, 

قَالَ:فَاَنْزَلَ اللهُ تَعَالَي: { لَقَدْ تَابَ اللهُ عَلَي النَّبِيِّ وَالْمُهَاجِرِيْنَ وَالاَنْصَارِالَّذِيْنَ اتَّبَعُوْهُ فِي سَاعًةِ العُسْرَةِ } حتَّي بَلَغَ : اِنَّهُ بِهِمْ رَؤُوْفٌ رَحِيْمٌ. وَعَلَي الثَّلاَثَةِ الّذِيْنَ خُلِّفُوْا حَتَّي اِذَاضَاقَتْ عَلَيْهِمُ الاَرْضُ بِمَا رَحُبَتْ}حَتَّي بَلَغَ { اتَّقُوْا اللهَ وَكُوْنُوا مَعَ الصَّادِقِيْنَ } سورة التوبة ,الآية: 117- 119

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: அப்போது அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இதுதான்: 'நபியையும்-துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த முஹாஜிர்களையும் அன்ஸர்களையும் அல்லாஹ் பொறுத்தருளினான். அவர்களில் ஒருசிலரின் உள்ளங்கள் நெறிதவறுதலின் பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த பிறகும்! (ஆனால் அவர்கள் நெறிதவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தார்கள்! அப்பொழுது) அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கிறான். மேலும் விவ காரம் ஒத்திபோடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்துவிட்டான். அவர்களது நிலைமை எந்தஅளவு மோசமாகிவிட்டதெனில்,பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்து அது குறுகி விட்டிருந்தது., அவர்கள் உயிர் வாழ்வதே கஷ்டமாகிவிட்டது. மேலும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிப்பதற்கு அவனது அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறுபுகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களின் மீது கருணை பொழிந் தான். திண்ண மாக அவன் பெரும் மன்னிப்பாளன்., கருணை மிக்கவன். இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வாய்மையாளர்களுடன் இருங்கள்,, (9: 117 - 119)

21 தபூக் யுத்தமும் தடுமாற்றமும் - 4
முதல் கோணல் முற்றும் கோணல்

قَالَ كَعْبٌ : وَاللهِ مَا اَنعَمَ اللهُ عَلَيَّ مِنْ نِعْمَةٍ قَطُّ بَعْدَ اِذْ هَدَانِيَ اللهُ لِلاِسْلاَمِ أعْظَمَ فِي نَفْسِي مِنْ صِدْقِي رَسُوْلَ اللهِ  أنْ لاَ اَكُوْنَ كَذَبْتُهُ, فَاَهْلِكَ كَمَا هَلِكَ الَّذِيْنَ كَذَبُوْا ., اِنَّ اللهَ تَعَالَي قَالَ لِلَّذِيْنَ كَذَبُوْا حِيْنَ أنْزِلَ الْوَحْيُ شَرَّ مَا قَالَ لاِحَدٍ, فَقَالَ اللهُ تَعَالَي : سَيَحْلِفُوْنَ بِاللهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَيْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ فَأعْرِضُوْا عَنْهُمْ أنَّهُمْ رِجْسً وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءً بِمَا كَانُوْا بَكْسِبُوْنَ. يَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللهَ لاَ يَرْضَي عَنِ الْقَوْمِ الْفَاسِقِيْنَ } - سورة التوبة ,الآية: 95 -96

கஅப்; (ரலி) அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இஸ்லாத்தின் பால் அல்லாஹ் எனக்கு வழிகாட்டிய பின்பு நபி (ஸல்)அவர்களிடம் நான் உண்மை பேசியதைவிட பெரியதோர் அருட் கொடையை அல்லாஹ் என் மீது அருளிடவில்லை! அவர்களிடம் நான் பொய்சொல்லி இருந்தால் பொய்சொன்னவர்கள் அழிந்துபோனதுபோல் நானும் அழிந்துபோயிருப்பேன். நிச்சயமாக அல்லாஹ் (வஹி எனும் இறையருட் செய்தியை இறக்கியருளியபொழுது) பொய் சொன்னவர்கள் குறித்து மிகவும் மோசமான நிலையைக் கூறினான்.,

'வேறு எவர் விஷயத்திலும் அப்படிக் கூறவில்லை! அல்லாஹ் கூறினான்;: நீங்கள் அவர்களிடம் திரும்பிவரும் பொழுது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்திட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலை யில் அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வார்கள். எனவே நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமலே இருந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் அசுத்தமானவர்கள். உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகம்தான். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டிட வேண்டும் எனும் நோக்கத்தில் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டா லும் திண்ணமாக அல்லாஹ், பாவிகளான இத்தகைய மக்கள்மீது திருப்பதி கொள்ளமாட்டான்,,(9: 95-96)

கஅப் (ரலி) அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: 'எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்தார்களோ, நபியவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்களோ அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினார்களோ அத்தகையவர்களின் விவ காரத்தைவிடவும் எங்கள் மூவரின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டது. அல்லாஹ் பின் வருமாறு குர்ஆன் வசனத்தை இறக்கியருளி எங்கள் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரையில் நபி (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தை ஒத்தி போட்டார்கள்!' விவகாரம் ஒத்திபோடப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்,,)

- இங்கு குல்லிஃபூ  எனும் வார்த்தை, நாங்கள் மூவரும் யுத்தத்தில் கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருந்தவர்கள் எனும்ரீதியில் சொல்லப்பட்டதல்ல, மாறாக, எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொல்லி - நபியவர்களும் அதனை ஒப்புக் கொண்டார்களோ அவர்களைவிடவும் எங்களது தீர்ப்பை பிற்படுத் துதல், எங்களது விவகாரத்தை ஒத்திபோடுதல் என்பதே கருத்து. (நூல்: புகாரி, முஸ்லிம்)

وَفِيْ رِوَايَةٍ { أنَّ النّبِيَّ  خَرَجَ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ يَوْمَ الْخَمِيْسِ , وَكَانَ يُحِبُّ أنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيْسِ }
وَفِيْ رِوَايَةٍ { وَ كَانَ لاَ يَقْدُمُ مِنْ سَفَرٍ اِلاَّ نَهَارًا فِيْ الضُّحَي , فَاِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ فصّلَّي فِيْهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ فِيْهِ }

மற்றோர் அறிவிப்பில் உள்ளது:'நபி(ஸல்)அவர்கள் தபூக் போருக்குக் கிளம்பியது வியாழக்கிழமையில்! மேலும் வியாழக்கிழமையிலேயே பயணம் புறப்பட விரும்பக்கூடியவர்களாய் இருந்தார்கள்,,

இன்னோர் அறிவிப்பில்;: 'பயணத்திலிருந்து திரும்பிவந்தால் முற்பகல் பகல் - வேளையில்தான் வருவார்கள். (ஊரை) வந்தடைந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். பிறகு அங்கு அமர்ந்திருப்பார்கள்,.

முதல் கோணல் முற்றும் கோணல்

தபூக் யுத்தம் ஹிஜ்ரி 9 ம் ஆண்டு நடைபெற்றது. முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன் ரோம் நாட்டுக் கிறிஸ்தவர்கள் பெரும் படைதிரட்டிக்கொண்டிருப்பதாகநபி(ஸல்)அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காக முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு நபியவர்கள் தபூக் நோக்கிப் புறப்பட்டார்கள்.

தபூக்கை அடைந்தபொழுது அங்கு எதிரிகள் யாரையும் காணோம். அவர்களின் போர் நடவடிக்கையோ நடமாட்டமோ எதுவும் இல்லை. முஸ்லிம்களை எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது எனக்கருதி, கிறிஸ்த வர்கள் பின்வாங்கி விட்டிருந்தார்கள். ஆகையால் நபியவர்கள் தபூக்கில் இருபதுநாட்கள் தங்கியிருந்துவிட்டுப் போர் எதுவுமின்றி மதீனா திரும்பினார்கள்.

மதீனாவில் இருந்து முஸ்லிம்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டபொழுது கடுமையான கோடைகாலம்! பழங்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு நெருங்கிய பருவம்!

நயவஞ்சகர்களோ மறுமைபற்றிக் கவலைப்படாமல் உலக வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்., அவர்களில் யாரும் போருக்குப் புறப்பட வில்லை. கழனிகளிலும் கனிகளிலும் கவனம் செலுத்தினார்கள். நிழலில் தஞ்சம் புகுந்தார்கள். தபூக் நோக்கிப் பயணமாவது அவர்களுக்கு மிகவும் பாரதூரமாகப்பட்டது! வாய்மையான இறைவிசுவாசிகளோ, நபியவர்களிடம் இருந்து கட்டளை பிறந்ததும் உடனே போருக்குப் புறப்பட்டுவிட்டார்கள்! பயணத்தின் தொலை தூரமோ கனிந்துவந்த கனிகளின் இனிமையோ அவர்களின் ஊக்கத்தைக் குலைத்திடவில்லை!

ஆனால் கஅப் பின் மாலிக்(ரலி)அவர்கள் தக்க காரணம் எதுவுமின் றியே தபூக் நோக்கிப் புறப்படாமல் பின்தங்கிவிட்டார்கள். அவர்கள் வாய்மை யான இறைநம்பிக்கையாளரே தவிர வஞ்சகர் அல்லர்! அவர்கள் சொன்னார்கள்:

'நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த யுத்தத்தைவிட்டும் நான் எப்பொழுதும் பின் தங்கியதில்லை'

- ஆம்! கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஓர் இறைவழிப்போராளியாகவே திகழ்ந்தார்கள்.

பத்று போரின் பின்னணி! 'ஆனால் பத்றுப் போரைத் தவிர'

- பத்றுப் போரில் கஅப் (ரலி) அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அன்று நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்து வெளிக்கிளம்பியது யுத்தத்தை நாடியல்ல. குறைஷிகளின் வாணிபக்குழு ஒன்றைத் தாக்கிப் பொருட்களைப் பறிக்க வேண்டும்என்றுதான் புறப்பட்டிருந்தார்கள். அதனால் நபியவர்களுடன் வந்தது குறைந்த அளவிலான தோழர்களே!

இங்கு ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்காவாசிகளின் வாணிபக் குழுமீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வியாபாரச் சரக்கு களைப் பறிப்பதற்காக நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் புறப்பட்டது வரம்பு மீறிய செயலோ அநீதியோஅல்ல. மக்கத்து குறைஷிகள்தாம் நபியவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடும் தொல்லை கொடுத்து மக்காவில் வாழும் உரிமையை அவர்களிடம் இருந்து பறித்து விட்டிருந்தாகள்! வீடு, வாசல்கள், சொத்து-சுகங்கள் அனைத்தைவிட்டும் அவர்களை வெளியேற்றி யிருந்தார்கள்! ஆகையால் குறைஷிகளின் வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுத்துஅவர்களுடைய வியாபாரச்சரக்குகளைப் பறிப்பதற்காக முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கை- தங்களுடைய உரிமைகளில் சிலவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் முயற்சியாகவே அமைகிறது!

ஆக! நபியவர்கள், வாணிபக்குழவை எதிர்கொள்வதற்காகப் புறப்பட்டதால் தான் அதிகப் படையையும் திரட்டவில்லை., போதிய ஆயுதங்களையும் குவித்துக்கொள்ளவில்லை! நபியவர்களோடு புறப்பட்டிருந்த முஸ்லிம்கள் வெறும் 313 பேர்தான்! உடன்சென்ற வாகனங்களும் குறைவுதான். எழுபது ஒட்டகங்களும் இரண்டு குதிரைகளும்தான் இருந்தன!

முஸ்லிம்கள் புறப்பட்டு வருவதை அறிந்த வாணிபக்குழுவின் தலைவர் அபூஸுப்யான், வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்ற வருமாறு குறைஷி களுக்குத் தூதுஅனுப்பிவிட்டுப் பாதையைக்கடலோரமாகமாற்றிக் கொண்டுத் தப்பிவிட்டார்.

அபூ ஸுப்யான் அனுப்பிவைத்த ஆள் மக்கா நகர் வந்து அபாய அறிவிப்புச் செய்து உதவி கேட்டதும் குறைஷிகள் - தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட அனைவரும் போருக்கான ஏற்பாட்டுடன் புறப் பட்டுவிட்டார்கள். பெரிய அளவில் ஆயுதங்ளைச் சேகரிகரித்துக் கொண்டு ஏறக்குறைய ஆயிரம் பேர் திரண்டு வந்தார்கள்!

அபூ ஸுப்யான் - நாங்கள் தப்பித்து வந்துவிட்டோம்., நீங்கள் மக்கா திரும்புங்கள். இப்போதைக்குப் போர் வேண்டாம் என்று மீண்டும் தூது அனுப்பிக் கேட்டுக்கொண்டபிறகும் குறைஷித் தலைவர்கள் மக்கா திரும்ப வில்லை. சண்டைக்கு வலியவந்தார்கள். ஆம்! குறைஷித் தலைவர்கள் ஆணவத்துடன் போர் முறசு கொட்டிக் கொண்டுவந்து பத்று மைதானம் வந்து முகாமிட்டார்கள். இறுதியில் அவர்களுடைய ஆணவத்திற்குக் கிடைத்த பரிசு வரலாறு காணாத தோல்விதான்!

- இவ்வாறு முஸ்லிம்கள் பத்றுப் போரைச் சந்தித்தது எதிர்பாராத ஒன்றாகும். அதனால்தான் அதில் கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் கலந்து கொள்ளாமலானது!

ஆனால் தொடக்க காலத்தில் நபியவர்களிடம் - இஸ்லாத்தின் பேரில் பைஅத் எனும் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த நிகழ்ச்சியில் தாமும் கலந்துகொண்டதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள் கஅப் (ரலி) அவர்கள். அந்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்திற்கு முன்பு மினாவில் ஒரு கணவாயில் வைத்து நடைபெற்றது. பத்று யுத்தத்தைவிட அதுதான் தமக்குப் பரியமானது என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் ஐயமின்றி அது ஒரு மகத்தான உடன்படிக்கை., மாபெரும் விசுவாசப் பிரமாணம்! ஆனாலும் பத்று யுத்தம்தான் காலமெல்லாம் மக்களிடையே பேசப்படும் வகையில் பிரபலம் அடைந்தது! ஏனெனில் அது முக்கியமானதொரு யுத்தம்., பிரபலம் அடைந்துவிட்டது. என்னஇருந்தாலும் உறுதிமொழி எடுக்கும் ஒருநிகழ்ச்சி போரைப் போல் பிரபலமாக முடியாது!

ஆக! கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தமக்குத்தாமே ஆருதல் சொல்லிக் கொள்கிறார்கள். பத்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புத் தப்பினாலும் அந்தக் கணவாய் உடன்படிக்ககையின் பாக்கியம் கிடைத்ததே என்று!

'நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மறைத்தே பேசுவார்கள்'

- அதாவது தங்களது நாட்டத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தெற்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் - வடக்கு நோக்கிப் புறப்பட வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். கிழக்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் மேற்கு நோக்கிப் பயணமாக வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். - இது நபியவர்கள் மேற்கொண்ட விவேகமிக்க நடவடிக்கை., போர்த் தந்திரம்!

ஏனெனில், எங்குச் செல்லப்போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அது பற்றிய செய்தி எதிரிகளுக்குக் கிடைத்துவிடலாம். அதற்கேற்ப அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்., போருக்குப்பொருத்தமான இடமெனஎந்தஇடத்தை நபியவர்கள் தேர்வு செய்துள்ளார்களோ அந்த இடத்தை விட்டும் எதிரிகள் விலகிச் சென்றிடவும் செய்யலாம்!

ஆனாலும் தபூக் போர்ச்சூழ்நிலையில் பொதுவான இந்த வழக்கத்திற்கு ஏற்ப நபியவர்கள் மறைத்துப் பேசவில்லை. தபூக் நோக்கிப் புறப்படப் போகிறோம் என்பதைத் தெளிவுபடவே கூறினார்கள். அப்படிச் செய்ததற்குப் பலகாரணங்கள் இருந்தன:

1) முன்பு நாம் குறிப்பிட்டதுபோன்று -அது கடுமையான கோடை காலம்., கனிகள் அறுவடைக்குத் தயாராகி வந்த நேரம்! மனித மனம் சுக வாழ்வை நாடும் இயல்புடையதாகவும் சோம்பலின் பக்கம் சாயக்கூடியதாகவும்தானே உள்ளது. எனவே மனத்தைக் கட்டுப்படுத்திப் பயனுள்ள பணிகளில் நாட்டம் செலுத்த வேண்டுமெனில் இலட்சியம் தெளிவாக இருப்பது அவசியம்!

2) மதீனாவில் இருந்து தபூக் வெகுதொலைவில் இருந்தது. எங்கும் ஒரேபாலைவெளி., மணற்பரப்பு!அத்துடன் கோடை வெயிலும் சுட்டெரித்துக் கொண்டிருந்தது! ஆகையால் இந்தப் பயணத்தில் முஸ்லிம்கள் கடுமையான தாகத்தையும் களைப்பையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இத்தகைய ச10ழ்நிலையில் எங்குச்செல்கிறோம் என்பதைவெளிப்படையாகச் சொன்னால்தான் அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும்!

3) எதிரிகளோ அதிக வலிமையுடன் இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை திகைப்பூட்டும் அளவு இருந்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஊக்கத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் எங்கு நோக்கிப் புறப்படுகிறோம்., யாரை எதிர்த்துப் போர் புரியப் போகிறோம் என்பதைத் தெளிவாகக் கூறினார்கள்!

'நபி(ஸல்)அவர்களும் முஸ்லிம்களும் போருக்கான தயாரிப்பைச் செய்து முடித்திருந்தார்கள் . . .'

ஆனால் கஅப்(ரலி)அவர்கள் அதைப் பிற்படுத்திக் கொண்டே இருந்தார் கள். தினமும் காலையில் வாகனத்தில் ஏறி, இதோ! இப்பொழுதே நான் புறப்பட்டுச் சென்று நபியவர்களை அடைந்துவிடுவேன்., முஸ்லிம்களோடு இணைந்துவிடுவேன் என்று கூறுவார்கள்தான். ஆனால் அவர்களால் அப்படிச் செயல்பட முடிவதில்லை. நிலைமை அவர்களை மேலும் மேலும் தாமிதப்படுத்திக்கொண்டே சென்றது!

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger